அர்ஜென்டீன கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி, இதுவே தனது இறுதி உலகக் கிண்ணத் தொடர் என்று அறிவித்துள்ளார்.
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டி மெஸ்ஸியின் இறுதிப் போட்டியாகும்.
இன்று (14) நடைபெறவுள்ள பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டீனாவுடன் மோதவுள்ளது.
தனது 5 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் 35 வயதான மெஸ்ஸி, 11 கோல்கள் அடித்து உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டினா சார்பில் அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.