கையூட்டல் பெறமுயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாவை கையூட்டலாக பெற முயன்றபோது, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர பத்திரகே உள்ளிட்ட மூன்று பேர் கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள், கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கையூட்டல் பெறமுயன்ற மூன்று பேருக்கு விளக்கமறியல் samugammedia கையூட்டல் பெறமுயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாவை கையூட்டலாக பெற முயன்றபோது, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர பத்திரகே உள்ளிட்ட மூன்று பேர் கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்களில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள், கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டனர்.இதன்போது, அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.