பாதாள உலக தலைவனாக கருதப்படும் துனுமல சரத், வரகாபொல, கலபிடமட, துனுமலவத்த பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (14) அதிகாலை கெப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துனுமல சரத் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.