தியாக தீபம் திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் அவரின் தியாகங்கள்
எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின்
முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வில் காந்தி பூங்காவில்
உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நடாத்தினார்கள்.
மனித
உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜோசப்மேரி தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின்
உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி, சிவில்
சமூக செயற்பாட்டாளர் லவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு
மாவட்ட அமைப்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது திலீபனின் திருவுருவப்படத்திற்கு அருட்தந்தை ஜோசப்மேரி
அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் திலீபனின் தியாகம் குறித்த சிறப்புகள் குறித்தான உரைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
தியாக தீபம் திலீபனின் தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லப்படவேண்டும். சரவணபவன் தெரிவிப்பு.samugammedia தியாக தீபம் திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் அவரின் தியாகங்கள்
எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின்
முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு
மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வில் காந்தி பூங்காவில்
உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நடாத்தினார்கள்.மனித
உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜோசப்மேரி தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின்
உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி, சிவில்
சமூக செயற்பாட்டாளர் லவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு
மாவட்ட அமைப்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது திலீபனின் திருவுருவப்படத்திற்கு அருட்தந்தை ஜோசப்மேரி
அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் திலீபனின் தியாகம் குறித்த சிறப்புகள் குறித்தான உரைகளும் இடம்பெற்றன.இந்த நிகழ்வில், வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.