2024ம் நிதி ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உரை நிகழ்த்தப்படவுள்ளது.
அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.
2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், 2024 பாதீட்டு தொடர்பான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.