• Oct 16 2024

இன்று வவுனியாவில் 15வது குடிசன தொகை மதிப்பீட்டின் இறுதி கட்டம் ஆரம்பம்

Tharmini / Oct 15th 2024, 3:32 pm
image

Advertisement

இலங்கையின்15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்ட கணக்கெடுப்பு  இன்றையதினம் மாவட்ட செயலாளரும் தொகை மதிப்பு ஆணையாளருமான சரத் சந்திரவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த ஆரம்ப நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, பட்டானிச்சூர்புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பட்டகாட்டு கிராமத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் தி. திரேஷ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் அ.யூட் நேசராஜா, வவுனியா பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர் ந.திலீபன் மற்றும் தொகை மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







இன்று வவுனியாவில் 15வது குடிசன தொகை மதிப்பீட்டின் இறுதி கட்டம் ஆரம்பம் இலங்கையின்15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்ட கணக்கெடுப்பு  இன்றையதினம் மாவட்ட செயலாளரும் தொகை மதிப்பு ஆணையாளருமான சரத் சந்திரவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த ஆரம்ப நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, பட்டானிச்சூர்புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பட்டகாட்டு கிராமத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் தி. திரேஷ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் அ.யூட் நேசராஜா, வவுனியா பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர் ந.திலீபன் மற்றும் தொகை மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement