யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின்
ஏற்பாட்டில் ஊழல் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு "ஊழல் அற்ற தேசத்தினை
உருவாக்குவோம், ஊழல் வேண்டாம்" என்னும் கருப்பொருளில் ஊழல் தடுப்புக்கான
உறுதிமொழி எடுக்கும் விழிப்புணர்வூட்டல் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில்
அமைந்துள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில்,
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில்
இடம்பெற்றது.
இதில்
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக பதவிநிலை அதிகாரிகள், அலுவலர்கள்,
கலந்துகொண்டு தடுப்புக்கான விழிப்புணர்வுக்கான உறுதிமொழியினை
எடுத்துக்கொண்டனர்.