சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான யுவான் ஜியாஜுன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவர் சீனாவில் உள்ள சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் யுவான் ஜியாஜூனின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.