காலியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் காலி, டிக்சன் வீதியில் இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே காரில் காத்திருந்த வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்