• May 11 2024

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபரீதம்...! பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Oct 24th 2023, 10:28 pm
image

Advertisement

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர்  விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலி, இராசவீதி பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் பொங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இன்று(24) மாலை இடம்பெற்றுள்ளதுடன் வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 72வயதான நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி என்ற ஐந்து பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபரீதம். பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர்  விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீர்வேலி, இராசவீதி பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் பொங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து இன்று(24) மாலை இடம்பெற்றுள்ளதுடன் வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் 72வயதான நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி என்ற ஐந்து பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement