வத்தளை பிரதான வீதியில் பெண்ணொருவரை கைவிலங்கிட்டு இழுத்துச் சென்ற குற்றச்சாட்டில் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்டை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட்டின் பிணையில் ஆட்சேபனை இல்லை என வத்தளை பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்த போதிலும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸாருக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பெண்ணை கைவிலங்கிட்டு இழுத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு சிக்கல் samugammedia வத்தளை பிரதான வீதியில் பெண்ணொருவரை கைவிலங்கிட்டு இழுத்துச் சென்ற குற்றச்சாட்டில் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்டை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட்டின் பிணையில் ஆட்சேபனை இல்லை என வத்தளை பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்த போதிலும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸாருக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.