மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை புத்தளம் பாலாவி சந்தியில் தீப்பந்தப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மற்றும் முன்னால் வடமேல் மாகான சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை செலவுக்கு எதிர்பு தெரிவித்து தீப்பந்தத்தை ஏந்தியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷஙகளை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்திற்கு எதிரான வசங்கள் பல பதாதைகளில் எழுதப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.