வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவோரை அங்கு வரும் குழுவினர்
மதம் மாற்ற போதனை வழங்குவதாக சிகிச்சைக்கு செல்லும் நோயாளர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று
வைத்தியசாலை நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் போது அங்கு வரும்
சில குழுவினர் நோய் தீர்க்க போதனை வழங்குவதாகவும், நோயாளர்களுக்கு
உதவுவதாகவும் கூறி தமது மத போதனைகளை வழங்குவதுடன், மதம் சார்ந்த துண்டு
பிரசுரங்கரைளயும் விநியோகித்து வருகின்றனர்.
இதனால், சிகிச்சைக்காக
செல்லும் பிற மதத்தவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன், குறித்த
சம்பவங்கள் நோயாளர் விடுதிகளில் நடைபெறுவதால் வைத்தியசாலை நிர்வாகமும் இது
தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் சிகிச்சைக்காக செல்லும் பொது மக்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.