களுத்துறை வடக்கு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு இரவு உணவை கொள்வனவு செய்யச் சென்ற பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், அதன் போது ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை கிதுலாவ பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு இரவு உணவுப் பொதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் முச்சக்கர வண்டியில் வந்த சிலர், கான்ஸ்டபிளை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு உணவை கொள்வனவு செய்யச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி. samugammedia களுத்துறை வடக்கு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு இரவு உணவை கொள்வனவு செய்யச் சென்ற பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளானவர் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், அதன் போது ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.களுத்துறை கிதுலாவ பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு இரவு உணவுப் பொதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் முச்சக்கர வண்டியில் வந்த சிலர், கான்ஸ்டபிளை தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.