• Sep 19 2024

இலங்கையில் இயர்போனால் இளைஞனுக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / Jun 16th 2023, 8:04 am
image

Advertisement

பேருவளை மரக்கலவத்தை பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் இயர்போன் இணைக்கப்பட்டு ரயில் பாதையின் குறுக்கே பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி படுகாமயடைந்துள்ளார்.

இந்நிலையில் சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியின் மூலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளானவர் பேருவளை மல்லபொக்க பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பு மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விரைவு ரயிலில் இந்த இளைஞன் மோதியுள்ளார்.

இளைஞன் தனது தந்தையுடன் முச்சக்கரவண்டியில் பேருவளை நகருக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு மரக்கலவத்தை பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது ரயிலில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இலங்கையில் இயர்போனால் இளைஞனுக்கு நேர்ந்த கதி. samugammedia பேருவளை மரக்கலவத்தை பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் இயர்போன் இணைக்கப்பட்டு ரயில் பாதையின் குறுக்கே பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.கடந்த 13ஆம் திகதி 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி படுகாமயடைந்துள்ளார்.இந்நிலையில் சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியின் மூலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.விபத்துக்குள்ளானவர் பேருவளை மல்லபொக்க பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விரைவு ரயிலில் இந்த இளைஞன் மோதியுள்ளார்.இளைஞன் தனது தந்தையுடன் முச்சக்கரவண்டியில் பேருவளை நகருக்கு சென்றுள்ளார்.அங்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு மரக்கலவத்தை பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது ரயிலில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement