• May 13 2024

நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டா மீண்டும் அரசியலுக்கு வந்து எதை சாதிக்க போகிறார்..? - மொட்டு எம்.பி. கேள்வி

Chithra / Sep 14th 2023, 9:20 am
image

Advertisement


நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது  என்பது கேலிக்கூத்தானதுஎன ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ அரச அதிகாரியாக சிறந்த முறையில் செயற்பட்டதால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கிறோம்.

69 இலட்ச மக்களாணை அவருக்கு கிடைத்தது என்று குறிப்பிடுவது தவறு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால் தான் அவருக்கு 69 இலட்ச மக்கள் ஆணை வழங்கினார்கள்.

69 இலட்ச மக்களாணையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ அரச தலைவராக சிறந்த முறையில் செயற்படவில்லை.

தவறான தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டு இறுதியில் நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தினார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதாக ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

69 இலட்ச மக்களின் ஆணையை பெற்று, முறையாக செயற்படாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றவர் மீண்டும் அரசியலுக்கு வருவது என்று குறிப்பிடுவது கேலிக்கூத்தானது. மீண்டும் அரசியலுக்கு வந்து அவர் எதை சாதிக்க போகிறார் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

முழு அரசியல் கட்டமைப்பையும் மக்கள் வெறுக்கும் நிலையை ஏற்படுத்திய கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏதும் முன்னெடுக்கவில்லை. கோட்டபய ராஜபக்ஷவினால் ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொண்டு கட்சி என்ற ரீதியில் முன்னேறிச் செல்கிறோம் என்றார்.

நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டா மீண்டும் அரசியலுக்கு வந்து எதை சாதிக்க போகிறார். - மொட்டு எம்.பி. கேள்வி நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது  என்பது கேலிக்கூத்தானதுஎன ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ அரச அதிகாரியாக சிறந்த முறையில் செயற்பட்டதால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கிறோம்.69 இலட்ச மக்களாணை அவருக்கு கிடைத்தது என்று குறிப்பிடுவது தவறு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால் தான் அவருக்கு 69 இலட்ச மக்கள் ஆணை வழங்கினார்கள்.69 இலட்ச மக்களாணையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ அரச தலைவராக சிறந்த முறையில் செயற்படவில்லை.தவறான தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டு இறுதியில் நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தினார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதாக ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.69 இலட்ச மக்களின் ஆணையை பெற்று, முறையாக செயற்படாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றவர் மீண்டும் அரசியலுக்கு வருவது என்று குறிப்பிடுவது கேலிக்கூத்தானது. மீண்டும் அரசியலுக்கு வந்து அவர் எதை சாதிக்க போகிறார் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.முழு அரசியல் கட்டமைப்பையும் மக்கள் வெறுக்கும் நிலையை ஏற்படுத்திய கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏதும் முன்னெடுக்கவில்லை. கோட்டபய ராஜபக்ஷவினால் ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொண்டு கட்சி என்ற ரீதியில் முன்னேறிச் செல்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement