• May 17 2024

இனப்படுகொலை நடக்காது என்று உலகில் கூறப்பட்டாலும் இன்று பலஸ்தீனத்தில் நடப்பதென்ன? சபையில் சால்வையணிந்து ஆதரவை வெளியிட்ட ஹக்கீம்

Chithra / Dec 2nd 2023, 3:39 pm
image

Advertisement

 

 

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கண்டிக்கும் அமெரிக்கத் தூதுவர், இஸ்ரேலில் நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

பலஸ்தீனத்திற்காக இலங்கை ஆதரவாக செயற்படவேண்டும். இனப்படுகொலை நடக்காது என்று உலகில் கூறப்பட்டாலும் இன்று பலஸ்தீனத்தில் நடப்பதென்ன?

பாலஸ்தீனத்திற்கு எங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக இன்று நாங்கள் இந்த சால்வையை அணிந்துள்ளோம். 

பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தப்படவேண்டுமென இந்த பாராளுமன்றத்தில் 157 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை .ஐ.நா சபைக்கு நாங்கள் அனுப்பினோம். 

ஆனால் போரை நிரந்தரமாக நிறுத்துவதில் சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளது. இஸ்ரேல் அப்பட்டமாகவே மனித உரிமைகளை மீறுகிறது. 

முதியோர்களை, சிறுவர்களை பெண்களை கொல்வதுடன் மனிதநேய பணியாளர்கள் என்று ஏரளாமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.


இனப்படுகொலை நடக்காது என்று உலகில் கூறப்பட்டாலும் இன்று பலஸ்தீனத்தில் நடப்பதென்ன சபையில் சால்வையணிந்து ஆதரவை வெளியிட்ட ஹக்கீம்   இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கண்டிக்கும் அமெரிக்கத் தூதுவர், இஸ்ரேலில் நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில்  இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,பலஸ்தீனத்திற்காக இலங்கை ஆதரவாக செயற்படவேண்டும். இனப்படுகொலை நடக்காது என்று உலகில் கூறப்பட்டாலும் இன்று பலஸ்தீனத்தில் நடப்பதென்னபாலஸ்தீனத்திற்கு எங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக இன்று நாங்கள் இந்த சால்வையை அணிந்துள்ளோம். பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தப்படவேண்டுமென இந்த பாராளுமன்றத்தில் 157 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை .ஐ.நா சபைக்கு நாங்கள் அனுப்பினோம். ஆனால் போரை நிரந்தரமாக நிறுத்துவதில் சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளது. இஸ்ரேல் அப்பட்டமாகவே மனித உரிமைகளை மீறுகிறது. முதியோர்களை, சிறுவர்களை பெண்களை கொல்வதுடன் மனிதநேய பணியாளர்கள் என்று ஏரளாமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement