இலங்கையில், அண்மைய நாட்களில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதற்கு, பெற்றோர்களே, பிரதான காரணம் என கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவர் ரூமி ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோர்கள், பிள்ளைகள் மீதான அதீத அக்கறை வெளிப்படுத்தாத நிலைமை காரணமாகவே சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகின்றார்.
குறிப்பாக குழந்தையொன்று உடல், மனம் மற்றும் பாலியல் என்ற மூன்று வழிகளில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது.
அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள தகவல்களின்படி, குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் குறிப்பிடுகின்றார். பாலியல் ரீதியிலான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் குழந்தைகளின் சமூகப் பின்னணியை எடுத்து நோக்கினால்,இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அல்லது பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்தாலும் சரியான கவனமும் புரிதலும் பாதுகாப்பும் கிடைப்பதில்லை அனைத்து வயதினரும் பாலியல் துஸ்பிரயோகம் செய்வதற்கு ஆசைப்படுவதாகவும், இதற்கு காரணம்.
உளவியல் மற்றும் பாலியல் பிரச்சினைகள், மிகை பாலியல் ஆசைகள் மற்றும் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த இயலாமை போன்ற விடயங்களை குறிப்பிடமுடியும்.
குறிப்பாக மிரட்டல் மூலம் பாலியல் உணர்வை தூண்டுவதற்கு பல்வேறு தந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் மனநல மருத்துவர் ரூமி ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பாலியல் துஸ்பியோகங்கள் தற்போது அதிகரிப்பதற்கு என்ன காரணம் . – மருத்துவர் வெளியிட்ட தகவல். samugammedia இலங்கையில், அண்மைய நாட்களில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதற்கு, பெற்றோர்களே, பிரதான காரணம் என கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவர் ரூமி ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.பெற்றோர்கள், பிள்ளைகள் மீதான அதீத அக்கறை வெளிப்படுத்தாத நிலைமை காரணமாகவே சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகின்றார்.குறிப்பாக குழந்தையொன்று உடல், மனம் மற்றும் பாலியல் என்ற மூன்று வழிகளில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது.அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள தகவல்களின்படி, குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் குறிப்பிடுகின்றார்.பாலியல் ரீதியிலான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் குழந்தைகளின் சமூகப் பின்னணியை எடுத்து நோக்கினால்,இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.அல்லது பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்தாலும் சரியான கவனமும் புரிதலும் பாதுகாப்பும் கிடைப்பதில்லை அனைத்து வயதினரும் பாலியல் துஸ்பிரயோகம் செய்வதற்கு ஆசைப்படுவதாகவும், இதற்கு காரணம்.உளவியல் மற்றும் பாலியல் பிரச்சினைகள், மிகை பாலியல் ஆசைகள் மற்றும் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த இயலாமை போன்ற விடயங்களை குறிப்பிடமுடியும்.குறிப்பாக மிரட்டல் மூலம் பாலியல் உணர்வை தூண்டுவதற்கு பல்வேறு தந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் மனநல மருத்துவர் ரூமி ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.