நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார தடைக்கு தமது தவறே காரணம் என இலங்கை மின்சார சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இலங்கை முழுவதும் கடந்த 9ம் திகதி திடீர் மீன் தடை ஏற்பட்டது.
சுமார் 6 மணிநேரம் இந்த மின் தடை தொடர்ந்த நிலையில், மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையே, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் என இலங்கை மின்சார சபை அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.