கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அடுத்துள்ளது தச்சகோடு என்ற பகுதியில் கணவன் சொல்வதை கேட்காது மொடனாக ஆடையணிந்த பெண்ணை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் வசித்து வரும் எபனேசர், பியூட்டிஷியன் சொந்தமான டெம்போ வைத்து ஓட்டி வந்துள்ளார். அவரது மனைவி ஜெப பிரின்ஷா. இருவரும் காதலித்து திருமணம்
செய்து கொண்ட நிலையில் 2 மகன்கள் பிறந்துள்ளனர்.
மணமானதிலிருந்து வீட்டிற்குள்ளேயே இருந்த ஜெப பிரின்ஷாவுக்கு திடீரென பியூட்டீஷியனாகும் ஆசையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பியூட்டிஷியன் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வகுப்பிற்கு சென்ற சில மாதங்களிலேயே கணவன் மனைவிக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.
ஏனெனில், ஜெப பிரின்ஷா திருவனந்தபுரம் சென்று வருவதாலும், பியூட்டிஷியன் கோர்ஸ் படிப்பதாலும் , மார்டன் டிரஸ் அணிவதற்கு பழக்கப்பட்டுள்ளார் .எப்பொழுதும் இல்லாதவாறு ஆடை அலங்காரங்கள் உடுத்துவதை கணவர் எபனேசர் கண்டித்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனினும், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தினை தங்கி கொள்ள முடியாத கணவன் எபனேசர், அரிவாளினால் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
மொடன் ட்ரெஸ் அணிந்தமையால் ஆத்திரமடைந்து கணவன் மனைவியை கொலை செய்தமை அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொடேன் ட்ரெஸ் அணிந்த மனைவி- ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம் SamugamMedia கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அடுத்துள்ளது தச்சகோடு என்ற பகுதியில் கணவன் சொல்வதை கேட்காது மொடனாக ஆடையணிந்த பெண்ணை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வரும் எபனேசர், பியூட்டிஷியன் சொந்தமான டெம்போ வைத்து ஓட்டி வந்துள்ளார். அவரது மனைவி ஜெப பிரின்ஷா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2 மகன்கள் பிறந்துள்ளனர். மணமானதிலிருந்து வீட்டிற்குள்ளேயே இருந்த ஜெப பிரின்ஷாவுக்கு திடீரென பியூட்டீஷியனாகும் ஆசையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பியூட்டிஷியன் படித்து வந்துள்ளார்.இந்நிலையில், வகுப்பிற்கு சென்ற சில மாதங்களிலேயே கணவன் மனைவிக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. ஏனெனில், ஜெப பிரின்ஷா திருவனந்தபுரம் சென்று வருவதாலும், பியூட்டிஷியன் கோர்ஸ் படிப்பதாலும் , மார்டன் டிரஸ் அணிவதற்கு பழக்கப்பட்டுள்ளார் .எப்பொழுதும் இல்லாதவாறு ஆடை அலங்காரங்கள் உடுத்துவதை கணவர் எபனேசர் கண்டித்துள்ளார்.இதனால் கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனினும், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தினை தங்கி கொள்ள முடியாத கணவன் எபனேசர், அரிவாளினால் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். மொடன் ட்ரெஸ் அணிந்தமையால் ஆத்திரமடைந்து கணவன் மனைவியை கொலை செய்தமை அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.