பொலனறுவை மாதுஓயா தேசிய சரணாலயத்தில் உலாவிய காட்டு யானைக் குட்டியொன்று பொறியில் சிக்கி பலத்த காயமடைந்திருந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிரிதலே வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்திய பிரிவு அதிகாரிகள் மற்றும் பிம்புரத்தேவ வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் யானைக் குட்டிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
இதன்போது யானைக் குட்டிக்கு மயக்கமருந்து ஏற்றி சுமார் 4 மணித்தியால முயற்சியின் பின்னர் காலில் சிக்குண்டிருந்த பொறியை அகற்றி யானைக் குட்டியை மீட்டெடுத்து மாதுரு ஓயா சரணாலயத்தில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.