பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.பி. அத்தபத்து தெரிவித்துள்ளார்.
பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளைக் குறைப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு, நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.பி. அத்தபத்து தெரிவித்துள்ளார்.பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளைக் குறைப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு, நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.