54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட போலிசார் வீதிச்சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்னிடமிருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சயிக்கிள் என்பன தருமபுர போலீசார் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேக நபர் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சியில் 54 போத்தல் கசிப்புடன் பெண் கைதுSamugamMedia 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட போலிசார் வீதிச்சோதனை மேற்கொண்டனர்.இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்னிடமிருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சயிக்கிள் என்பன தருமபுர போலீசார் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேக நபர் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்