• May 19 2024

53 ஆயிரம் ரூபாவுடன் பணப்பையை தவறவிட்ட பெண்..! - இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதி செய்த நெகிழ்ச்சி செயல்..! samugammedia

Chithra / Sep 23rd 2023, 4:05 pm
image

Advertisement

பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் தவறுதலாக விட்டுச் சென்ற 53 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை முச்சக்கர வண்டியின் சாரதி மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைந்த சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் இன்று காலை நடந்துள்ளது.

பாணந்துறை வேகட கவிராஜ மாவத்தையில் முச்சக்கர வண்டி சாததியாக தொழில் புரியும் பாணந்துறை சொலமன் மாவத்தையை சேர்ந்த நிஹால் பெர்னண்டோவுவின் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பெண்ணொருவர் தவறுதலாக தனது பணப்பையை வண்டியில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து முச்சக்கர வண்டியில் கிடைத்த பணப்பையுடன் இன்று காலை பெண்ணின் வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி சாரதி அதனை பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

பணப்பையில் 53 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பெண்ணுக்கு சொந்தமான பெறுமதியான ஆவணங்கள் இருந்துள்ளன.

பெண் இந்த பணத்தை கடனுக்கு பெற்றுக்கொண்டுள்ளதுடன் வீட்டை புனரமைப்பதற்காக பொருட்களை கொள்வனவு செய்ய கடைக்கு சென்ற போதே பணப்பையை முச்சக்கர வண்டியில் தவறவிட்டுள்ளார்.

இந்த பெண்ணும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது


53 ஆயிரம் ரூபாவுடன் பணப்பையை தவறவிட்ட பெண். - இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதி செய்த நெகிழ்ச்சி செயல். samugammedia பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் தவறுதலாக விட்டுச் சென்ற 53 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை முச்சக்கர வண்டியின் சாரதி மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைந்த சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் இன்று காலை நடந்துள்ளது.பாணந்துறை வேகட கவிராஜ மாவத்தையில் முச்சக்கர வண்டி சாததியாக தொழில் புரியும் பாணந்துறை சொலமன் மாவத்தையை சேர்ந்த நிஹால் பெர்னண்டோவுவின் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பெண்ணொருவர் தவறுதலாக தனது பணப்பையை வண்டியில் விட்டுச் சென்றுள்ளார்.இதனையடுத்து முச்சக்கர வண்டியில் கிடைத்த பணப்பையுடன் இன்று காலை பெண்ணின் வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி சாரதி அதனை பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.பணப்பையில் 53 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பெண்ணுக்கு சொந்தமான பெறுமதியான ஆவணங்கள் இருந்துள்ளன.பெண் இந்த பணத்தை கடனுக்கு பெற்றுக்கொண்டுள்ளதுடன் வீட்டை புனரமைப்பதற்காக பொருட்களை கொள்வனவு செய்ய கடைக்கு சென்ற போதே பணப்பையை முச்சக்கர வண்டியில் தவறவிட்டுள்ளார்.இந்த பெண்ணும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement