• May 13 2024

காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு! SamugamMedia

Chithra / Mar 26th 2023, 10:05 am
image

Advertisement

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திப்பூங்காவுக்கு முன்பாகவுள்ள வாவியில் பெண்னொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லையெனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தினை மரண விசாரணையை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு SamugamMedia மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திப்பூங்காவுக்கு முன்பாகவுள்ள வாவியில் பெண்னொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லையெனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்தினை மரண விசாரணையை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement