• May 20 2024

கால்வாயில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! samugammedia

Chithra / Jun 11th 2023, 10:24 am
image

Advertisement

அனுராதபுரம் நகருக்கு அருகிலுள்ள ஹால்பானு கால்வாயில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி பகுதியினூடாக பாயும் ஹால்பானு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உயிரிழந்து சுமார் 5 நாட்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெண்ணின் சடலம் உருக்குலைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஹால்பானு கால்வாய் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிய போது சடலத்தை அவதானித்துள்ளார்.

பின்னர் விவசாயி இது குறித்து அநுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கால்வாயில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு samugammedia அனுராதபுரம் நகருக்கு அருகிலுள்ள ஹால்பானு கால்வாயில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அநுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி பகுதியினூடாக பாயும் ஹால்பானு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உயிரிழந்து சுமார் 5 நாட்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பெண்ணின் சடலம் உருக்குலைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.ஹால்பானு கால்வாய் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிய போது சடலத்தை அவதானித்துள்ளார்.பின்னர் விவசாயி இது குறித்து அநுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement