தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிருந்து போட்டியாளராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்தான் லாஸ்லியா.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு வெள்ளித் திரையில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கியது.
வெள்ளித் திரையில் வரவிரும்பிய லாஸ்லியா ஓரிரு படங்களில் நடித்திருந்தார். எனினும் குறித்த படங்கள் அவர் எதிர்பார்த்தளவு வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை..
இதுஒருபுறம் இருக்க லாஸ்லியா பல நாடுகளுக்கும் சென்று அங்கே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது பிங்க் கலர் குட்டை உடை அணிந்து போட்டோஸ் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த படங்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருவதுடன் வைரலாகியும் வருகின்றது.