கிளிநொச்சி - அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்ணேரிக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
கிளிநொச்சியில் இருந்து வண்ணேரிக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், வண்ணேரிக்குளம் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக அக்கரையான் பொஸிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி தமிழர் பகுதியில் துயரம் SamugamMedia கிளிநொச்சி - அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்ணேரிக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.விபத்து தொடர்பில் தெரியவருகையில்,கிளிநொச்சியில் இருந்து வண்ணேரிக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், வண்ணேரிக்குளம் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.திருமணமாகி 4 மாதங்களே ஆன, 34 வயதுடைய வசந்தரூபன் சுமன் என்பவரே விபத்தில் உயிரிழந்தார்.இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக அக்கரையான் பொஸிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்