• Sep 20 2024

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!samugammedia

Tamil nila / Nov 23rd 2023, 8:05 pm
image

Advertisement

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முந்தல் - அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன்  ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் - கீரிமட்டாவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த வீதியோர மின்விளக்குகளை பொருந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் ஏணி ஒன்றின் மூலம் மின்சாரத் தூணில் ஏறி மின்குமிழை பொருத்திக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனையடுத்து, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்புsamugammedia புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.முந்தல் - அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன்  ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.முந்தல் - கீரிமட்டாவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த வீதியோர மின்விளக்குகளை பொருந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் ஏணி ஒன்றின் மூலம் மின்சாரத் தூணில் ஏறி மின்குமிழை பொருத்திக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.இதனையடுத்து, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement