கண்டி - ஹந்தானை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த 10க்கும் மேற்பட்டோர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவர்கள் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.