இரட்டைச் சகோதரிகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மங்கள எலிய நுக செவன கிராமத்தில் வசிக்கும் 16 வயதுடைய இரு சிறுமிகளே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இரண்டு சிறுமிகளும் நேற்றுவீட்டிலிருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் பெற்றோர் முந்தல் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.