• Sep 19 2024

18 வயது இளைஞரின் கைகளை கட்டி ஆடைகளை அகற்றி தங்க நகைகள் கொள்ளை! கொடூரச் சம்பவம் samugammedia

Chithra / Jul 30th 2023, 8:02 pm
image

Advertisement

புலத்சிங்கள பகுதியில் 18 வயதான இளைஞரின் கைகளை கட்டி, ஆடைகளை அகற்றி, அவர் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று சனிக்கிழமை (29) மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ரப்பர் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அதன் பின்னர் குறித்த இளைஞரின்  ஆடைகளை அகற்றி, கைகளை கட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

18 வயது இளைஞரின் கைகளை கட்டி ஆடைகளை அகற்றி தங்க நகைகள் கொள்ளை கொடூரச் சம்பவம் samugammedia புலத்சிங்கள பகுதியில் 18 வயதான இளைஞரின் கைகளை கட்டி, ஆடைகளை அகற்றி, அவர் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று சனிக்கிழமை (29) மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ரப்பர் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞரின்  ஆடைகளை அகற்றி, கைகளை கட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement