• May 17 2024

அவுஸ்திரேலியாவுக்கு சட்விரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 19 பேர் கைது

harsha / Dec 5th 2022, 5:05 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவுக்கு சட்விரோதமாக படகு மூலம் செல்வதற்காக தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 19 நபர்களை  சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை ,சம்பூர் - கொக்கட்டி கடற்கரையில் வைத்தே இவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 19 சந்தேக நபர்களில் 10 ஆண்களும், 03 பெண்களும், 06 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பூர் பொலிஸில் வைத்து  விசாரணை செய்யப்பட்டு  மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்விரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 19 பேர் கைது அவுஸ்திரேலியாவுக்கு சட்விரோதமாக படகு மூலம் செல்வதற்காக தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 19 நபர்களை  சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை ,சம்பூர் - கொக்கட்டி கடற்கரையில் வைத்தே இவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 19 சந்தேக நபர்களில் 10 ஆண்களும், 03 பெண்களும், 06 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பூர் பொலிஸில் வைத்து  விசாரணை செய்யப்பட்டு  மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர் .சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement