லங்கா ப்ரிமியன் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் தற்போது கொழும்பில் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய இலங்கையில் முதன்முறையாக நடைபெறும் இந்த எல்.பி.எல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அத்துடன்,கொழும்பில் இன்று(14.06.2023) பிற்பகல் ஆரம்பமான குறித்த நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இவ்வருடம் இடம்பெறும் எல்.பி.எல் இன் நான்காவது தொடரில், கார்லோஸ் பிராத்வைட், சிக்கந்தர் ராசா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, மைக்கேல் பிரிட்டோரியஸ், ஆண்ட்ரே பிளெட்சர், சுரேஷ் ரெய்னா, ஹாரி டெக்டர், மார்ட்டின் குப்டில், ஜெரார்ட் எராஸ்மஸ் மற்றும் எம்டி தைஜுல் இஸ்லாம் உட்பட பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், காலி டைட்டன்ஸ், பி-லவ் கண்டி, தம்புள்ளை ஆரா மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய ஐந்து அணிகளுக்கும் தலா 500,000 அமெரிக்க டொலர்கள் ஏல தொகையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 எல்.பி.எல் ஏலம்- அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் samugammedia லங்கா ப்ரிமியன் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் தற்போது கொழும்பில் நடைபெற்று வருகின்றது.இதற்கமைய இலங்கையில் முதன்முறையாக நடைபெறும் இந்த எல்.பி.எல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.அத்துடன்,கொழும்பில் இன்று(14.06.2023) பிற்பகல் ஆரம்பமான குறித்த நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.இவ்வருடம் இடம்பெறும் எல்.பி.எல் இன் நான்காவது தொடரில், கார்லோஸ் பிராத்வைட், சிக்கந்தர் ராசா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, மைக்கேல் பிரிட்டோரியஸ், ஆண்ட்ரே பிளெட்சர், சுரேஷ் ரெய்னா, ஹாரி டெக்டர், மார்ட்டின் குப்டில், ஜெரார்ட் எராஸ்மஸ் மற்றும் எம்டி தைஜுல் இஸ்லாம் உட்பட பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.மேலும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், காலி டைட்டன்ஸ், பி-லவ் கண்டி, தம்புள்ளை ஆரா மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய ஐந்து அணிகளுக்கும் தலா 500,000 அமெரிக்க டொலர்கள் ஏல தொகையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.