அமெரிக்காவில் மைனே, லெவிஸ்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு மோலிசன் வேயில் உள்ள பந்துவீச்சு சந்து மற்றும் லிங்கன் தெருவில் உள்ள ஸ்கெமிங்கீஸ் பார் ரூ கிரில் உணவகம் ஆகியவற்றிலேயே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, ஷெரிப் அலுவலகம் 'சந்தேகத்திற்குரிய நபரின்' படங்களை வெளியிட்டது .
அந்த நபர் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியை வைத்திருப்பதைக் காண முடிந்ததுடன் குறித்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதேவேளை லூயிஸ்டன் பொதுப் பள்ளிகள் கண்காணிப்பாளர் ஜேக் லாங்லாய்ஸ், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.