யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம்
ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய
தினம்(19) அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.
ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த
நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் சி. நிதர்ஷன் ஏற்றி வைக்க,
உருவப் படத்திற்கு மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர் ம. நியூட்டன்
அணிவித்தார்.
தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
போர்
சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப் பணியாற்றியவர் மயில்வாகனம்
நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய
போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில்
கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு
சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள்,
வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
அதேவேளை அவரது வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.
அதன் போது வீட்டில்
இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி
மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்.samugammedia யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம்
ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய
தினம்(19) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.
ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த
நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் சி. நிதர்ஷன் ஏற்றி வைக்க,
உருவப் படத்திற்கு மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர் ம. நியூட்டன்
அணிவித்தார். தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர்
சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப் பணியாற்றியவர் மயில்வாகனம்
நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய
போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். இந்நிலையில்
கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு
சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள்,
வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். அதேவேளை அவரது வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.அதன் போது வீட்டில்
இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி
மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.