நேபாளம் பாக்லுங் மாவட்டத்தில் இன்று நள்ளிரவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் 4.7 அளவில் பாக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌர் பகுதியில் ஏற்பட்டது.
இதனையடுத்து 2.07 மணியளவில் பாக்லுங் மாவட்டத்தின் குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5.3 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 3.28 மணிக்கு அதிகாரிசௌர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தற்போது வளமையாகிவிட்டது இதன் காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.