கொழும்பு - பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்குப் பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் இன்று (21.08.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
50 அடி பள்ளத்தில் விழுந்து கெப்ரக வாகனம் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம் samugammedia கொழும்பு - பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்குப் பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் இன்று (21.08.2023) இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.