• May 02 2024

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 8 வயது குழந்தை..! தாய் வைத்தியசாலையில்..!

Chithra / Apr 5th 2024, 9:39 am
image

Advertisement

 

மாத்தறையில் முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தையொன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

மாத்தறை, தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் நேற்று காலை டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின் பின் இருக்கையில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின் துரதிர்ஷ்டவசமாக 8 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய நிலையில் பொலிஸாரரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 8 வயது குழந்தை. தாய் வைத்தியசாலையில்.  மாத்தறையில் முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தையொன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.மாத்தறை, தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் நேற்று காலை டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின் பின் இருக்கையில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன்பின் துரதிர்ஷ்டவசமாக 8 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய நிலையில் பொலிஸாரரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement