ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன சிறுவர் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.