• May 20 2024

தல்தென புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து 9 பேர் தப்பியோட்டம்...! அதிகாலையில் சம்பவம்..!samugammedia

Sharmi / Apr 17th 2023, 10:49 am
image

Advertisement

பதுளை, தல்தென திறந்தவெளி புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து ஒன்பது நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (17) அதிகாலை குறித்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தப்பியோடிய நபர்களில் இருவர் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய ஏனைய நபர்களை கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறு மற்றும் போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று, புனர்வாழ்வு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களே இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

தல்தென புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து 9 பேர் தப்பியோட்டம். அதிகாலையில் சம்பவம்.samugammedia பதுளை, தல்தென திறந்தவெளி புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து ஒன்பது நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (17) அதிகாலை குறித்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிட்டுள்ளார்.தப்பியோடிய நபர்களில் இருவர் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர்.தப்பியோடிய ஏனைய நபர்களை கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சிறு மற்றும் போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று, புனர்வாழ்வு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களே இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement