தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள மக்கள் திரும்புவதற்கு வசதியாக இன்றும் நாளையும் விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து கொழும்புக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபையும் இலங்கை ரயில்வேயும் மேலதிக பஸ்கள் மற்றும் ரயில்களை இயக்குகின்றன.