பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பசறை, கோணக்கலையில் கடந்த 17 ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாகனம் சீரமைக்கும் இடத்தில் பணிபுரியும் சந்தேக நபர், குறித்த மாணவன் கடைக்கு சென்று வீடு திரும்புகையில் மாணவனை, வாகனம் திருத்தும் இடத்துக்கு அழைத்து பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த மாணவன் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மது அருந்தக் கொடுத்து 13வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை.samugammedia பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பசறை, கோணக்கலையில் கடந்த 17 ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாகனம் சீரமைக்கும் இடத்தில் பணிபுரியும் சந்தேக நபர், குறித்த மாணவன் கடைக்கு சென்று வீடு திரும்புகையில் மாணவனை, வாகனம் திருத்தும் இடத்துக்கு அழைத்து பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.குறித்த மாணவன் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.