• May 19 2024

கொழும்பில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு...!samugammedia

Sharmi / Sep 19th 2023, 3:18 pm
image

Advertisement

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை  கொழும்பு ,கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் மருதானை பிரதேசத்தில்  நினைவேந்தல்களை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை மற்றும் மருதானை  பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்' என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று மாலை மருதானையில் அமைந்துள்ள சமய, சமூக நடுநிலையத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு.samugammedia தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை  கொழும்பு ,கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் மருதானை பிரதேசத்தில்  நினைவேந்தல்களை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.கோட்டை மற்றும் மருதானை  பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.'ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்' என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று மாலை மருதானையில் அமைந்துள்ள சமய, சமூக நடுநிலையத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement