• May 19 2024

ஒரு வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை... தந்தையும் படுகாயம்!

Tamil nila / Dec 3rd 2022, 4:43 pm
image

Advertisement

ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது, 1 வயது குழந்தையை முதலை ஒன்று இழுத்துச்சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. 


மலேசியா நாட்டில் சபா மாகாணத்தின் லகட் தாட்டு என்ற கடலோர பகுதியில் உள்ள ஆற்றில், தன்னுடைய சிறு படகில் தனது ஒரு வயது மகன் உடன் ஒருவர் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது, படகை திடீரென முதலை ஒன்று தாக்கியுள்ளது.


முதலை தாக்குதலின்போது, அந்த இளைஞரும் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அவரால் முதலையை தாக்குபிடிக்க முடியவில்லை என தெரிகிறது. தலையில் கடும் பற்தடுங்களுடன் பல்வேறு காயங்களுடன் அவர் ஆற்றில் கவிழ்ந்தார். கரை சேர்ந்த அவரை அப்பகுதியினர் மீட்டனர். ஆனால், அவரின் ஒரு வயது மகனை முதலை ஆற்றின் ஆழமான பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டது. கடைசியாக அந்த முதலை, வாயில் குழந்தையோடு நீருக்கு வெளியே தெரிந்தது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.  



இதுகுறித்து லகட் தாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு முகமையின் தலைவர் சும்ஷோ ரஷீத் கூறுகையில்,"குழந்தையின் தந்தை தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். குழந்தையின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்" என்றார். 



ராயல் மலேசியன் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் இணைந்து குழந்தையின் உடலை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆட்கொல்லி முதலையின் தாக்குதலை அடுத்து, அக்கம் பக்கம் கிராமத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


கிராம் மக்கள் பலரும் உணவுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் ஆற்றையே நம்பியிருப்பதால் அவர்கல் அப்பகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவையிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முதலையிடம் சிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், தற்போதைக்கு ஆற்றுப்படுக்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்டபட்டுள்ளது. 




ஒரு வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை. தந்தையும் படுகாயம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது, 1 வயது குழந்தையை முதலை ஒன்று இழுத்துச்சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. மலேசியா நாட்டில் சபா மாகாணத்தின் லகட் தாட்டு என்ற கடலோர பகுதியில் உள்ள ஆற்றில், தன்னுடைய சிறு படகில் தனது ஒரு வயது மகன் உடன் ஒருவர் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது, படகை திடீரென முதலை ஒன்று தாக்கியுள்ளது.முதலை தாக்குதலின்போது, அந்த இளைஞரும் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அவரால் முதலையை தாக்குபிடிக்க முடியவில்லை என தெரிகிறது. தலையில் கடும் பற்தடுங்களுடன் பல்வேறு காயங்களுடன் அவர் ஆற்றில் கவிழ்ந்தார். கரை சேர்ந்த அவரை அப்பகுதியினர் மீட்டனர். ஆனால், அவரின் ஒரு வயது மகனை முதலை ஆற்றின் ஆழமான பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டது. கடைசியாக அந்த முதலை, வாயில் குழந்தையோடு நீருக்கு வெளியே தெரிந்தது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.  இதுகுறித்து லகட் தாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு முகமையின் தலைவர் சும்ஷோ ரஷீத் கூறுகையில்,"குழந்தையின் தந்தை தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். குழந்தையின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்" என்றார். ராயல் மலேசியன் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் இணைந்து குழந்தையின் உடலை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆட்கொல்லி முதலையின் தாக்குதலை அடுத்து, அக்கம் பக்கம் கிராமத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம் மக்கள் பலரும் உணவுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் ஆற்றையே நம்பியிருப்பதால் அவர்கல் அப்பகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவையிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முதலையிடம் சிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், தற்போதைக்கு ஆற்றுப்படுக்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்டபட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement