களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நேற்று இரவு மாற்றுத்திறனாளி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த
நபர் நேற்று மாலை மரண வீடொன்றுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு
வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால், தேடிப் பார்த்தபோது அயல்
வீடொன்றுக்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.
பின்னர் குடும்பத்தார் அவரை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளார் எனவும், அதனை மறுநாள்
மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும்
படுகொலை செய்யப்பட்டவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி ஒருவர் கொடூரமாக படுகொலை. களுத்துறையில் சம்பவம்.samugammedia களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நேற்று இரவு மாற்றுத்திறனாளி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அந்த
நபர் நேற்று மாலை மரண வீடொன்றுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு
வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால், தேடிப் பார்த்தபோது அயல்
வீடொன்றுக்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.பின்னர் குடும்பத்தார் அவரை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளார் எனவும், அதனை மறுநாள்
மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும்
படுகொலை செய்யப்பட்டவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.சந்தேகநபர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.