• May 01 2024

யாழில் இப்படியும் ஒரு வைத்தியரா!

Sharmi / Feb 2nd 2023, 9:50 am
image

Advertisement

நாட்டில் தற்போது மக்கள் பல்வேறுவிதமான நோய்த் தாக்கங்களுக்கு சிகிச்சை பெறவென அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடிவருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பல  வைத்தியர்கள் இருப்பினும்  ஒரு சில வைத்தியர்களே மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களாக விளங்குகின்றனர்.

இவ்வாறு மக்களின் பாராட்டுக்களை பெற்ற வைத்தியராகவும் அதேவேளை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர் தொடர்பிலே இன்று நாம் ஆராய்வோம்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் சிறிய வைத்திய நிலையம் ஒன்றை நடாத்துபவர்தான் மருத்துவர் அருளானந்தம்.

81 வயதிலும் தளராது தனது மருத்துவ பணியினை திறம்பட ஆற்றிவருகின்றார்.

தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2 மணிவரை பல இடங்களிலும் இருந்து வருகை தரும் மக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தோடு மருத்துவம் பார்க்கும் அதேவேளை, வறியவர்கள் மற்றும் தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளித்து வருகிறார்.

இவ்வாறாக பல்வேறு மக்கள் இவரை ஒரு மனிதக் கடவுள் என்றும் பாராட்டுகின்றனர்.

பணத்தினை மட்டும் நோக்கமாக கொண்டு பல வைத்திய நிலையங்கள் இயங்கிவரும் இன்றைய நிலையில் அவற்றுக்கு மத்தியில் இப்படியும் ஒரு வைத்தியர் இருக்கின்றார் என்பதில் நாம் பெருமைகொள்வோம்.




யாழில் இப்படியும் ஒரு வைத்தியரா நாட்டில் தற்போது மக்கள் பல்வேறுவிதமான நோய்த் தாக்கங்களுக்கு சிகிச்சை பெறவென அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடிவருகின்றனர்.இந்நிலையில் நாட்டில் பல  வைத்தியர்கள் இருப்பினும்  ஒரு சில வைத்தியர்களே மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களாக விளங்குகின்றனர்.இவ்வாறு மக்களின் பாராட்டுக்களை பெற்ற வைத்தியராகவும் அதேவேளை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர் தொடர்பிலே இன்று நாம் ஆராய்வோம்.அந்தவகையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் சிறிய வைத்திய நிலையம் ஒன்றை நடாத்துபவர்தான் மருத்துவர் அருளானந்தம்.81 வயதிலும் தளராது தனது மருத்துவ பணியினை திறம்பட ஆற்றிவருகின்றார்.தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2 மணிவரை பல இடங்களிலும் இருந்து வருகை தரும் மக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தோடு மருத்துவம் பார்க்கும் அதேவேளை, வறியவர்கள் மற்றும் தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளித்து வருகிறார். இவ்வாறாக பல்வேறு மக்கள் இவரை ஒரு மனிதக் கடவுள் என்றும் பாராட்டுகின்றனர்.பணத்தினை மட்டும் நோக்கமாக கொண்டு பல வைத்திய நிலையங்கள் இயங்கிவரும் இன்றைய நிலையில் அவற்றுக்கு மத்தியில் இப்படியும் ஒரு வைத்தியர் இருக்கின்றார் என்பதில் நாம் பெருமைகொள்வோம்.

Advertisement

Advertisement

Advertisement