மினுவாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் நபரொருவரை மினுவாங்கொடை பொலிஸார் நேற்று (7) கைது செய்துள்ளனர்.
மது அருந்தியபோது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய அஸ்வென்ன வத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.