நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் நேற்று நோர்வூட் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் 8 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு வழங்கிய தகவலின் படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் கடந்த காலத்தில் இவ்வாறான குற்ற செயளில் ஈடுபட்டு வந்தவர் என தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளார் என அந்த அதிகாரி கூறினார்.