கல்முனை அமானா வங்கி தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற விபத்தின் போது தனியார் பேருந்தினால் பழக்கடை ஒன்றும், அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியன சேதமாகியுள்ளது.
இவ்விபத்து இன்று (11) காலை 10.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.